ஞானசாரவுக்கு ஜம்மியதுல் உலமா துணை போகக் கூடாது !



அஹமட்-
ன்று ஞானசார தேரருக்கு விளக்கமளிக்க முனையும் அகிலஇலங்கை ஜம்மியதுல் உலமா அன்று முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ காலத்தில் எவ்வாறான விளக்கங்களைவழங்கியது என்பதை விளக்க வேண்டுமென முன்னாள் பானதுறைபிரதேச சபை தலைவர் இபாஸ் நபுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவத் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை ஞானசாரதேரருக்கு இஸ்லாம் பற்றிய விளக்கமளித்து வருவதாக தனதுஊடக அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளது.ஞானசாரசாரதேரருக்கு இஸ்லாம் பற்றி விளக்கமளிப்பது எப்போதே நடந்திருக்கவேண்டிய விடயம். இப்போது அவர் பொறியில் இறுகியுள்ளசந்தர்ப்பத்தில் நடாத்தவேண்டிய தேவை என்னவுள்ளது? அன்றுமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் இவ்வாறானஎன்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவர்கள் இஸ்லாம் பற்றி விளக்கமளித்துவரும் சமகாலப்பகுதியிலேயே அவர் முஸ்லிம்களுக்கு எதிரானகருத்துக்களை ஊடகவியலாளர் மாநாடு நடாத்தி கூறிவருகிறார்.அவர் திருந்திவிடுவார் என்ற ஒரு சிறுசமிஞ்சையையாவது காட்டியிருந்தால் இது பற்றிசிந்தித்திருக்கலாம். அல்லது அவர் சில விடயங்கள் குறித்து அகிலஇலங்கை ஜம்மியதுல் உலமாவை பகிரங்க விவாதத்துஅழைத்திருந்தார் அப்போதாவது உலமா சபை சென்றிருக்கலாம்.

இப்போது அவருடன் பேச்சுக்கு செல்வது, அவரை காப்பாற்றும்முயற்சியாக பார்ப்பத் தவிர வேறு கோணத்தில் பார்க்கமுடியாதுள்ளது. அவர் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களை பேரின மக்களிடத்தில் விதைத்துள்ளார்.

அவைகளை பேரின மக்களின் உள்ளங்களில் இருந்து கூட்டி சுத்தம்செய்ய வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அவர் தனதுகருத்துக்களை பிழையென பகிரங்கமாக ஏற்க வேண்டும். இதன்பின்னால் இருந்த சக்திகள் பற்றி வெளிப்படுத்த வேண்டும். அவர்அவ்வாறு செய்வாராக இருந்தால் நாம் அவரருடன் சமரசம்பேசலாம் அதேநேரம் அவரின் நீதி மன்ற விடயங்கள் தொடர்பில்நாம் தலையிட முடியாது.அவ்வாறில்லாமல் அவரின் பிடியைவிடுவிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

இன்று ஞானசாரவுடன் பேச்சுக்கு செல்லும் முஸ்லிம் குழுவினர்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில்விண்னுலகிலா இருந்தார்கள். ஏன் அன்று ஒரு நீதி, இன்று ஒரு நீதி?முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்திலும்இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால்பிரச்சினைகள் குறைவடைந்திருக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில்பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு முஸ்லிம்களும் ஒரு காரணம்என்பதை இவற்றினூடாக அறிந்துகொள்ளலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -