தென்கிழக்குப் பல்கலையில் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியின் ஆரம்ப நிகழ்வு!



லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2025/2026 ஆம் கல்வியாண்டில் ஆங்கில டிப்ளோமா கற்கையில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கான ஆரம்ப நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் கேட்போர்கூடத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியின் இணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியினை உத்தியோகபூர்வமாக ஆரம்பத்தித்து வைக்கும் நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்வின்போது கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி, பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், DELTதிணைக்களத்தின் தலைவர், கலாநிதி எம்.ஐ. பௌசுல் கரீமா, சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஸ்ஹர் ஆகியோரும் உரையாற்றினர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 25 வருடங்களுக்கு மேலாக ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியினை நடாத்தி வருவதாகவும் அதனூடாக பல நூறு மாணவர்கள் நன்மையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வின்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஏ,எம். சமீம் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். அப்துல் றஹ்மான் மற்றும் விரிவுரையாளர் இசட். ஹுறுள் பிர்தொஸ், ஆங்கில மொழி போதனாசிரியர் எம்.எச்.எம். அல் இஹ்சான் உள்ளிட்டவர்களுடன் கற்கை நெறியைத் தொடரவுள்ள மாணவர்களும் கலந்து கொண்டனர்.















 





















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :