60ஐத் தொடும் ஹாஷிம் உமர் பௌண்டேசனின் மடிகனணிகள்!



ஹாஷிம் உமர் பௌண்டேசனின் "கல்விக்கு கைகொடுப்போம்" எனும் திட்டத்தின்கீழ் 12 ஆவது தடவையாகவும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் ஐந்து மாணவர்களுக்கு மடிகனணிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு பௌண்டேசனின் தலைமையகத்தில் ஸ்தாபகர், புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் எதிர்வரும் 2025.07.05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மடிகனணிகளை வழங்கும் 12 ஆவது அணியில் பண்டார கொஸ்வத்தவைச் சேர்ந்த எம்.என்.எவ். சப்fரா, பாணந்துறையைச் சேர்ந்த எம்.எவ். ஐஸா, மாடுல்சீமையைச் சேர்ந்த எஸ்.ஜெ. விர்ஜினி, கண்டி உடதன்விலவைச் சேர்ந்த ஏ.எஸ். அஹமட், விபிலையைச் சேர்ந்த ஆர்.எம். சாஹிரா பானு ஆகியோரது பெயர்களை ஹாஷிம் உமர் பௌண்டேசனின் தெரிவுக் குழு முன்மொழிந்துள்ளது.

கொழும்பிலுள்ள பௌண்டேசனின் தலைமையகத்தில் குறித்த நேரத்தில் இடம்பெறவுள்ள மடிகனணிகளை வழங்கிவைக்கும் நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளும் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மிகப்பிரபல்யமான ஹாஷிம் உமர் பௌண்டேசன், பல்வேறு மக்கள்நல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலனுக்கு மிகவும் பிரதானமாக தேவைப்படும் மடிக்கணினிகளை "கல்விக்கு கைகொடுப்போம்" எனும் திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கடந்த நோன்புப் பெருநாளிலும் வரவுள்ள ஹஜ்ஜுப் பெருநாளிலும் ஊடகவியலாளர்களை மகிழ்விக்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகளுக்கு நிதியுதவிகளைச் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :