ஊடகப் பிரிவு-
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தமிழ் மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட வேண்டும். தமிழ் மொழி தெரியாத பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்படக்கூடாது. அப்படி நியமித்தால் அது தேசிய சகவாழ்வுக்கு அனாவசியமான கேடு விளைவித்து தமிழ் மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும்.
தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பை கொண்டுள்ள நான் இது தொடர்பில் அக்கறை கொண்டுள்ளேன் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் கூறியுள்ளேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு, தமிழ் மாவட்ட செயலாளரையே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியமிப்பதாக எனக்கு உறுதியளித்துள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.