மட்டக்களப்புக்கு தமிழ் அரச அதிபர்- மனோவிடம் வஜிர உறுதி


ஊடகப் பிரிவு-

ட்டக்களப்பு மாவட்டத்திற்கு தமிழ் மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட வேண்டும். தமிழ் மொழி தெரியாத பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்படக்கூடாது. அப்படி நியமித்தால் அது தேசிய சகவாழ்வுக்கு அனாவசியமான கேடு விளைவித்து தமிழ் மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும்.

 தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பை கொண்டுள்ள நான் இது தொடர்பில் அக்கறை கொண்டுள்ளேன் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் கூறியுள்ளேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு, தமிழ் மாவட்ட செயலாளரையே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியமிப்பதாக எனக்கு உறுதியளித்துள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -