தெ.கி.ப.கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 7ஆவது சர்வதேச ஆய்வரங்கு.-இணைய வழி ஊடாக ஏற்பாடு



சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிகள் பீடத்தின் ஏழாவது சர்வதேச ஆய்வரங்கு பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம்.மஸாஹிர் அவர்களின் தலைமையில் நாளை (22) இணைய வழி ஊடாக நடைபெறவுள்ளது.

இஸ்லாமிய கற்கைகள் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.நபீஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இணைய மூலமான இவ்வாய்வரங்கு ' இஸ்லாமிய அறிவியல் மற்றும் அறபுக் கற்கைகள் ஊடாக மனித வள அபிவிருத்தியை மேற்கொள்வதில் நடுநிலையான அனுகுமுறையை கையாளுதல்' எனும் தொனிப் பொருளில் இடம்பெறவிருப்பதாக ஆய்வரங்கின்; செயலாளர் விரிவுரையாளர் எம்.வை.எம்.சுகீறா சபீக் தெரிவித்தார்.

இவ்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், இவ்வாய்வரங்கின் தொடக்க நிகழ்வில் பிரதம பேச்சாளராக மலேசியா மலாயா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் றைஹானா பிந்தி ஹாஜி அப்துல்லாஹ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இவ்வாய்வரங்கில் சுமார் 66 ஆய்வுக் கட்டுரைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாரள்களால் முன் வைக்கப்படவிருக்கின்றன என்பது விஸேட அம்சமாகும்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :