சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக அல்ஹாஜ் முபாறக் தெரிவு!



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான விஷேட பொதுக் கூட்டம் (08) பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பின்வரும் நிர்வாகிகள் நம்பிக்கையாளர் சபையால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய தலைவராக முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர், பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக், செயலாளராக ஓய்வுபெற்ற புகையிரத பாதுகாப்புப் பொறுப்பதிகாரி
எஸார் மீராசாஹிப், பொருளாளராக தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.எம். சமீம், பிரதித் தலைவராக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் டாக்டர் ஏ.எம். மிஸ்பாஹ் உப தலைவராக ஜம்இய்யத்துல் உலமா சபையின் சாய்ந்தமருது-மாளிகைக்காடு கிளையின் தலைவர்
அல்ஹாஜ் மௌலவி எம்.எம்.எம். மீராசாஹிப் (ஷர்க்கி), பிரதிச் செயலாளராக காரைதீவு பிரதேச செயலகத்தின் முதல் நிலை சிறுவர் நல உத்தியோகத்தர் ஏ. ஜெஸ்மீர், உதவிச் செயலாளராக தொழிலதிபர் ஏ.எச்.எம். ஹாரூன், உப பொருளாளராக ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஐ. நஜீம், கணக்காய்வாளராக நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார், ஊடக ஒருங்கிணைப்பாளராக உதவித் தபால் அத்தியட்சகர் யூ.எல்.எம். பைசர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :