ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகத்துக்கு புரவலர் ஹாஷிம் உமரின் வாழ்த்துச் செய்தி



ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 30வது வருடாந்த நிர்வாகத் தெரிவு இன்று (27) கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில், புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம். பைரூஸ், புதிய செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷம்ஸ் பாஹிம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த மகிழ்வான தருணத்தை முன்னிட்டு ஊடகத் துறையுடனும் ஊடகவியலாளர்களுடனும் நெருங்கிய உறவை பேணிவரும் புரவலர் ஹாஷிம் உமர் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில்,
*“ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடந்த பல தசாப்தங்களாக நாட்டின் ஊடகத் துறையில் முஸ்லிம் சமூகத்தின் குரலை வலுப்படுத்தி, அவர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு வந்துள்ளது. இந்நேரத்தில், புதிய நிர்வாகத்தின் தெரிவு ஊடகத்துறையின் ஒற்றுமையையும், ஊடகவியலாளர்களின் அந்தஸ்த்தையும் மேம்படுத்தும் வகையில் அமையும் என நம்புகிறேன்.

நாடளாவிய ரீதியில் பரந்துபட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து, அவர்களை வலுப்படுத்தி, நாட்டுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக வீசப்படும் சவால்களை தகர்த்தெறியவும் புதிய நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

புதிய பொறுப்பில் அல்லாஹ் நிறைந்த வெற்றிகளையும் வழிகாட்டுதலையும் அருள்வானாக!”* என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :