அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு.



நூருல் ஹுதா உமர்-
டந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஊடாக போட்டியிட்டு உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான செயலமர்வு 26,27,28.09.2025 ஆகிய தினங்களில் மட்டக்களப்பு சர்வோதயம் மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

அக்கட்சியின் தேசிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது கட்சியின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ் அமீர் அலி மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. அஷ்ரப் தாஹிர் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

இச்செயலமர்வின் வளவாளர்களாக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. ஐங்கரன் மற்றும் விவசாய அமைச்சின் பிரதான கணக்காளர் திரு. உதய ராஜன் ஆகியோர் தொழிற்பட்டருந்தனர்.

முதலாவது நாள் செயலமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின் நிதி சார் நடைமுறைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்த பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்செயலமர்வில் இலங்கை பூராகவும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :