ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் நிர்வாக சபைக் கூட்டமும் – புதிய தீர்மானங்களும்



ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் நிர்வாக சபைக் கூட்டமும் அம்பாரை மாவட்ட ஆதரவாளர்களுடனான சந்திப்பும் நேற்று (28.09.2025) மருதமுனை மூன் வில்லேஜ் ஹோட்டலில் கட்சித் தலைவர் எம். முஸ்னத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கட்சியின் உயர்சபை உறுப்பினர்களான முஹம்மது ரபீக், ஏ. எம். ஸக்ரான், முஹம்மத் ரஷாத், செயளாளர் இர்பான் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

கூட்டத்தில் கட்சியின் எதிர்கால முன்னேற்றத்தையும், நாட்டின் தற்போதைய அரசியல் சூழலையும் விவாதித்ததுடன், பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:

மன்னாரைச் சேர்ந்த முஹம்மது சதீக் முப்தி அவர்கள், கட்சியின் உபத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி அநுர குமாரா வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை பாராட்டி, அவருக்கு நன்றிக்கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சுதந்திரத்தை வலுப்படுத்தும் நோக்கில், நாட்டில் பெண்களுக்கான தனித்துப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், இத்தீர்மானங்கள் கட்சியின் நிலைப்பாட்டையும் சமூகத்திற்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டனர்.

கட்சியின் செயளாளர் இர்பான் முஹிதீன் இவ்வாறு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :