தமிழகத்தில் நடிகர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல்: இலங்கை உலமா கட்சித் தலைவர் ஆழ்ந்த அனுதாபம்



மிழக வெற்றிக் கழக தலைவர், பிரபல நடிகர் விஜய் அவர்கள் தமிழ்நாடு, கரூரில் கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கியுள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து இலங்கை உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

"உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கு எங்கள் கட்சி சார்பிலும் எனது தனிப்பட்ட முறையிலும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோன். இந்த துயரச் சம்பவம் தமிழ்நாட்டின் மக்களை ஆழமான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது."

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நெரிசல்மிக்க கூட்டங்கள் ஏற்படாதபடி பொது இடங்களில் தாய்மார்களும் குழந்தைகளும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் நெரிசல் சம்பவத்தின் உண்மையான காரணங்கள் விரைவில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி மருத்துவமனைகளில் துயர் துடைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இலங்கை உலமா கட்சி, பொதுமக்கள் பாதுகாப்பையும், குழந்தைகள் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி, எதிர்கால பொதுக் கூட்டங்களில் அரசு இதை கடைபிடிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :