தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது



பாறுக் ஷிஹான்-
ல்லாயிரம் ரூபா பெறுமதியுள்ள தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவ்வாறு குறித்த தேக்கு மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பொலிஸார் வங்களாவடி பிரதேசத்தில் திங்கட்கிழமை(29) குறித்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் சம்மாந்துறை விளினியடி 02 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையர் கைதானவர் ஆவார்.

குறித்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கடத்தப்பட்ட மரக்குற்றிகள் உட்பட் சந்தேக நபர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :