எப்.முபாரக் -
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அனைத்து பாமசிகளையும் திறக்குமாறு பொலிஸ் திணைக்களம் அறிவித்ததற்கமைய இன்று(10) அனைத்து பாமசிகள் மற்றும் மருந்து சாலைகளும் திறந்துள்ளன.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பாமசி கடைகளும் இன்று காலை 8.00 மணிக்கே திறக்கப்பட்டன.
திருகோணமலை நகரிலுள்ள பெரிய பாமசி கடைகள் திறந்துள்ள போதிலும் யாரும் கடைக்கு மருந்துகள் வாங்குவதை அவதானிக்க கூடியதாக இல்லை.
பிரதான வீதிகள் வெருச்சோடிக் காணப்படுவதோடு வீதிகளிலே பொலிஸாரின் மற்றும் வியாபார ரீதியிலான லொறிகளும் செல்லுவதை மட்டுமே காணக்கூடியதாக உள்ளது.
இம்மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மூதூர்,புல்மோட்டை,தம்பலாகாமம், மற்றும் சேருவில போன்ற பகுதிகளிலுள்ள அனைத்து பாமசிகளும் திறந்துள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.