திருகோணமலை மாவட்டத்தில் பாமசிகள் திறந்துள்ள போதிலும் வியாபாரம் நடைபெறவில்லை


எப்.முபாரக் -

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அனைத்து பாமசிகளையும் திறக்குமாறு பொலிஸ் திணைக்களம் அறிவித்ததற்கமைய இன்று(10) அனைத்து பாமசிகள் மற்றும் மருந்து சாலைகளும் திறந்துள்ளன.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பாமசி கடைகளும் இன்று காலை 8.00 மணிக்கே திறக்கப்பட்டன.

திருகோணமலை நகரிலுள்ள பெரிய பாமசி கடைகள் திறந்துள்ள போதிலும் யாரும் கடைக்கு மருந்துகள் வாங்குவதை அவதானிக்க கூடியதாக இல்லை.
பிரதான வீதிகள் வெருச்சோடிக் காணப்படுவதோடு வீதிகளிலே பொலிஸாரின் மற்றும் வியாபார ரீதியிலான லொறிகளும் செல்லுவதை மட்டுமே காணக்கூடியதாக உள்ளது.

இம்மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா,மூதூர்,புல்மோட்டை,தம்பலாகாமம், மற்றும் சேருவில போன்ற பகுதிகளிலுள்ள அனைத்து பாமசிகளும் திறந்துள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -