வாகூரவெட்டையில் வைத்திய முகாம்!



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை, கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு இலவச வைத்திய முகாம் ஒன்றை நடாத்தினர்.

உகந்தமலை நுழைவாயிலில் இருந்து காட்டுப்பாதையில் பயணிக்கும்போது தரிக்கும் முதலாவது தரிப்பிடமான வாகூரவெட்டையில் இம் முகாம் நேற்று முன்தினம் நடாத்தப்பட்டது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணனின் ஒழுங்கமைப்பில் வைத்திய குழுவினரும், தமிழ் இளைஞர் சேனையின் தலைவர் அ. டிலாஞ்சன் தலைமையிலான இளைஞர் சேனை உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

யாத்திரிகர்கள் செல்லும் வழியான வண்ணாத்திர கிணற்றடியில்( வாகூரவெட்டை)இந்த வைத்திய முகாம் நடாத்தப்பட்டதால் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அடியார்கள் தெரிவித்தனர்.

அத்துடன் யாத்திரிகர்கள் அதிகளவில் மருத்துவ சேவையை பெற்றிருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :