கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து பிரிமோ நிறுவனம் மலையகப்பகுதியில் பணிசெய்கிறது.


பிரிடோ நிகழ்ச்சித்திட்டப்பணிபாளர் எஸ் கே.சந்திரசேகரன் தெரிவிப்பு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்-
கொரோனா தொற்று ஆபத்து தொடங்கிய காலத்தில் இருந்து பிரிடோ நிறுவனம் தனது பணித்தளங்களில் உள்ள பொலிஸாரோடு இணைந்து கொரோனா பாதுகாப்பு விழிப்புணாவு திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகின்றது.
இந்த வகையில் நானுஓயா பொலிஸாரின் உதவியுடன் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் அதன் முலம் பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பொகவந்தலாவை பொலிஸாருடன் இணைந்து 'வீட்டுக்கு வீடு விழிப்புணர்வு திட்டம் என்ற தொனியில் இப்பகுதியில் உள்ள 44 தோட்டங்களில் உள்ள 6046 குடும்பங்களை சேர்ந்த் 23862 பேருக்கு விழிப்புணர்வூ வழங்கப்பபட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் கொரோனாவூக்கு எதிரான சுகாதார பாதுகாப்பு தொடர்பான விழி;ப்புணர்வூ ஏற்படுத்தபட்டது.
இதேவேளை குறித்த தோட்டங்களில் உள்ள சமூக அபிவிருத்தி குழுக்களும் முன்பள்ளி ஆசிரியைகளும் பிரிடோ பணியாளர்களும்; ஒருங்கிணைந்து செயல்படும் நிலைமை உருவாகி உள்ளது.
அத்தோடு நேரடியாக தோட்டங்களுக்கு சென்று மக்களை விழிப்புணர்வூட்டுவதில் பிரிடோ பணியாளருக்கும் பொலிஸார் வழங்கிய ஒத்துழைப்பு மக்கள் மத்தியில் மதிப்பை ஏற்படுத்தியூள்ளது.
அதே வேளையில் இவ்வாறான பணிகளில் ஈடுபடும் பொலிஸாரும் பிரிடோ பணியாளர்களும் தரமான பாதுகாப்பு உடைகள் இன்றியே இந்த பணிகளை செய்ய வேண்டியிருந்ததுடன் அவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.
இதனால் முதற்கட்டமாக இந்த பணிகளில் நேரடியாக ஈடுபடும் பொலிஸாருக்கு இந்த பாதுகாப்பபு உடைகளை வழங்கும் பொறுப்பினையூம்
இதற்காக செலவூத்தொகையின் ஒரு பகுதியை பிரிடோ நிறுவனமும்இமற்றும் டயகோணியா நிறுவனம் பொகவந்தலாவை பகுதி நலன் விரும்பிகள் ஆகியோரும் பங்களிப்பு செய்தனர்.
இந்த கொரோனா பாதுகாப்பு உடைகளை போலிஸாரிடம் கையளிக்கும் நிகழ்வூ பிரிடோ நிறுவனத்தின் திட்ட இயக்குனர் எஸ்.கே சந்திரசேகரன் தலைமையில் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் 19.04.2020 அன்று நடைபெற்றது.
இதன் போது; உடைகளை பெற்றக் கொண்ட பொகவந்தலாவை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ எஸ் ;டபிலியூ எஸ் பண்டார கருத்து தெரிவிக்கையில் மிகவூம் தேவையான ஒரு சமயத்தில் இந்த உடைகள் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவூம் சமூகத்திற்கு செய்யூம் சேவைக்கு சமூகத்தில் இருந்து பாதுகாப்பும் அங்கீகாரமும் பொலிஸாருக்கு கிடைப்பதை காண்பது மகிழ்சியையூம் திருப்தியையூம் தருவதாக கூறினார்.
நிறுவனம எப்போதும் எல்லா விடயங்களிலும் சமூகத்தின் பங்களிப்போடு பணிகளை செய்வது அந்த பணிகள் வெற்றியடைவதற்கு காரணமாக இருப்பதாகவூம் இந்த நிகழ்வு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்த பெரிதும் உதவும் என தாம் நம்புவதாகவூம் கூறி அதற்காக பிரிடோ நிறு;வனத்திற்கு நன்றி தெரிவித்;தார்.
இந்த நிகழ்வில் சமூக அபிவிருத்திக் குழுக்களை பிரதிநிதிப்படுத்தும் முகமாக கெர்கஸ்வோல்ட் கொட்டியாகல பிரிட்வெல் தோட்ட சமூகஅபிவிருத்த்pக் குழுவை சார்ந்த ஆ.மைக்கல் சு.பழனியாண்டி ளு.தமிழ்செல்வன் பிரிடோ நிறுவன பிராந்திய இணைப்பாளரும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -