சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.இர்ஷாதின் மாமனார் காலமானார்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.இர்ஷாதின் மாமனார் காலமானார்.
மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும் கொட்டாரமுல்லை நளீமியா புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற அதிபர் முஹம்மது லெப்பை முஹம்மது சரீப் நேற்றிரவு காலமானார்.

சில காலம் உடல்நலக் குறைவாக இருந்த இவர் தனது 94 வயதில் காலமானார். மன்னார் விடத்தல் தீவு அலிஹார் மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் நீண்டகாலம் கடமையாற்றிய இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ராஹிலா உம்மாவின் அன்புக் கணவரும் மர்ஹ_மா மஹ்ஜபீன் சரீபா, ராஜி சரீப், ஹிதாயா, ஹினாயா, ரமீஸா, ஜஹான்ரா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், என்றூ சினன், முஹம்மத் ஜீப்ரி, ஊடகயிலாளர் இர்ஷாத், ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று முற்பகல் 11.00 மணிக்கு (31.03.2020) கொட்டாரமுல்ல ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெறும்.(நாட்டின் அசாதாரண நிலைமகள் காரணமாக குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலரே கலந்து கொள்ள முடியும்- 
அவருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் கிடைக்க துஆச் செய்யுங்கள்)

தொடர்புகளுக்கு –ஏ.எஸ்.எம்.இர்ஷாத்- 0772984521-ஊடகவியலாளர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -