சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம். நிலாம்டீன்-
தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலுக்காக ஹக்கீமை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட முடியாது .ஹக்கீம் மீது பல அவதூறுகள் உள்ளது .நரித் தந்திரம் கொண்டவர். முஸ்லிம் கட்சி என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம்களை ரணிலிடம் அடகு வைத்த மகா பாவி > முடுச்சு
மாறி > மொள்ள மாறி > கப் மாரி அவைகள் வேறு விடயம் .
அவரை எங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவரை கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றோம்.இன்னும் விமர்சிப்போம் .அவைகள் வேறு .
ஹக்கீம் சிங்கள பகுதியில் பிறந்து வாழ்ந்து வருபவர் .அவர் ஒரு போதும் சிங்கள அரசியலுக்கு விரோதமாக நிற்கமாட்டார் .
ஹக்கீம் மூலமாக முஸ்லிம் இனம் ஒரு போதும் ஒரு விமோசனமும் பெறப் போவதில்லை .
ஹக்கீம் கலஹெதர ஐதேக அமைப்பாளர் .இதெல்லாம் வாஸ்தவம்தான் .
அதற்காக ஹக்கீமை பழிவாங்கும் நோக்கோடு அல்லது பழி வாங்குகின்றோம் என்று ஒரு பயங்கரவாதியின் போட்டோ ஒன்றின் மூலமாக இல்லாத பொல்லாத ஒன்றை வைத்துக்கொண்டு பயங்கரவாதியோடு பின்னிப் பிணைவது எந்த ஊர் நியாயம் .
ஹக்கீமை பழி வாங்குகின்றோம் என்று சிங்களத்துக்குப் போட்டுக் கொடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் சிங்களத்திடம் அசிங்கப்பட அவமானப்பட முடியாது ..இது ஹச்கீமின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல .இது இந்த நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினை .
இப்படிப்பட்ட ஈனச் செயலில் யாரும் ஈடுபட முடியாது .அதுவும் ஈமான் கொண்ட முஸ்லிமாக ஈடுபட முடியாது .கேவலம் கெட்ட அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் என்ன அபாண்டமும் சுமத்த முடியுமா?
அப்படி ஈடுபடுவது என்பது பச்சையாக சொன்னால் அது விபச்சாரம்.
மஹிந்தரின் கூலிகள் மஹிந்தரின் ஏஜெண்டுகள்தான் இந்த ஈனச் செயலில் ஈடுபட்டு வருகின்றார்கள் .
ஹக்கீம் மீது எங்களுக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு அது வாஸ்தவம்தான் .ஆயினும் அவர் தனது அரசியல் எதிரிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கவில்லை.
அவர் நினைத்திருந்தால் அதை இலகுவாக செய்திருக்கலாம். அவர் செய்யவில்லை. என்னதான் இருந்தாலும் ஹக்கீமின் பண்புக்கு முன்னாடி எல்லா விமர்சனங்களும் புஷ்வாணம் ஆகின்றது .
அமைச்சர் ரிசாத் மீது முழுச் சிங்களமும் கொதித்து எழுந்த போது ரிசாத்தைக் காப்பற்றியுள்ளார் .
ஆனால் தற்போதைய முஸ்லிம் அரசியலில் ஹக்கீம் கட்சிக்கு பொது எதிரி ரிசாத் .ஹக்கீம் நினைத்திருந்தால் இந்த சமயத்தில் ரிசாத்தை உண்டு இல்லை என்று செய்திருக்கலாம் இன்று ரிசாத் ஹக்கீமிடம் சரணாகதி ..
ஆனால் ஹக்கீம் அப்படி செய்யாமல் அரசியல் நாகரிகத்தோடு ரிசாத்தை கை கொடுப்பான் தோளன் என்ற பாணியில் காப்பாற்றியுள்ளார்.
ஹக்கீம் இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட மாட்டார் என்ற நம்பிக்கை எமக்கு எப்போதும் உண்டு.
இப்பொது ஹக்கீமுக்கு முஸ்லிம் அரசியல் எதிரி என்று யாருமில்லை .
ரிசாத் ஹிஸ்புல்லாஹ் போன்றோரின் அரசியல் செயல் பாட்டால்தான் சிங்களத்திடம் ஹக்கீம் அசிங்கப்பட வேண்டி இருக்கு .தலை குனிய வேண்டி இருக்கு . இல்லை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இவர்களின் வியாபார அரசியலால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கப் பட்டிருக்கிறோம் .
ஹக்கீமின் அரசியல் சாதுரியத்தால்தான் ரிசாத் ஹிஸ்புல்லாஹ் தப்பியுள்ளார்கள் என்பதை ரிசாத் ஹிஸ்புல்லாஹ் தரப்புக்கள் மறக்க கூடாது.
ஈஸ்டர் குண்டு வெடித்த போது இதே தளத்தில் நாம் சொல்லியிருந்தோம் குண்டு வெடிப்புக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் ஒரு போதும் தொடர்புகள் இருக்காது என்று . ஆனால் இந்தக் குண்டு வெடிப்பில் வெளிக்கை /வெளி ஆள் ஒன்று இருக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லியிருந்தோம்.
ஹக்கீமை இப்போது யாரும் தூற்ற வேண்டாம்.அதற்கான நேரம் காலம் இதுவல்ல,இப்போது ஒரு ஆட்சி மாற்றம் நிற்கின்றோம் .பொது தேர்தல் வரட்டும் அப்போது ஹக்கீமை உண்டு இல்லை என்று பண்ணிடுவம் .