புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து இன்று அதிகாலை உரையாற்றினார்.
இதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம் என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் மக்கள்மயப்படுத்தப்பட்ட அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதே தமது நோக்கம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -