ரணில் விக்ரமசிங்கவிற்கு விமல் வீரவன்ச காலக்கெடு!!!


முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று இரவு மாத்திரம் அலரி மாளிகையில் நிம்மதியாகத் தூங்குவதற்கு நேரம் வழங்குவதாகவும் நாளை காலை முதல் அவர் அங்கு இருக்க முடியாது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நேற்று (26) இரவு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர புதிய பிரதமரை சந்தித்து, அவரின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதாகத் தெரிவித்ததாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
அலரி மாளிகைக்கு மக்கள் வந்து விரட்டும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தார்.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -