ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
நடக்க இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச சபைக்கான செம்மண்ணோடை மாவடிசேனை வட்டாரத்திற்காக செம்மண்ணோடை பிரதேசத்தினை மையப்படுத்தி பிரதி அமைச்சர் அமீர் அலியின் அரசியல் செயற்பாட்டாளர் சம்மூன்னுடைய பெயரும் மாவடிச்சேனையை மையப்படுத்தி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்பத்தாவினுடைய பெயரும் வேட்பாளர்களாக பேசப்பட்டு வந்த நிலையில் புதிய வட்டரார தேர்தல் முறையின் கீழ் குறித்த இரண்டு பிரதேசத்திற்குமாக ஒரு வேட்பாளரே களமிறங்க முடியும் என்ற நிலை உருவாகியது.
இதனால் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை மிகவும் சுமூகமான முறையில் தீர்த்து வைப்பதற்காக களத்தில் இறங்கிய சமூக ஆர்வலரும் பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர அரசியல் செயற்பாட்டாளருமான சட்டோ வை.எல்.மன்சூர் ஏனைய பிரதி அமைச்சர் அமீர் அலியின் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் கலந்தாலோசித்து சமரச அடிப்படையிலும், எவருக்கும் பாதிப்பில்லாத வகையிலும், இரண்டு ஊர்களினுடைய ஒற்றுமையினை கருத்தில் கொண்டும், பிரதேசத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் இவ்வாறான பிரச்சனைகளை எதிர் நோக்குகின்ற பொழுது இவ்வாறுதான் அப்பிரச்சனையினை சுமூகமான முறையில் கையாளுவது என்பதை எடுத்து காட்டும் முகமாக முன்னாள் மாகாண சபை வேட்பாளரும், சமூக ஆர்வலரும், சமூர்த்தி முகாமையாளருமான ஹக்கீமினை பொது வேட்பாளராக செம்மண்ணோடை பிரதேசத்தினை மையப்படுத்தி பிரதி அமைச்சர் அமீர் அலியின் கட்சியின் சார்பில் களமிறக்கியுள்ளனர்.
அதற்கு பிற்பாடு வேட்பாளர்களாக பேசப்பட்டு வந்த அல்பத்தாஹ் மற்றும் சம்மூன் ஆகியோர்கள் தங்களுடைய பூரண விருப்பத்தினை பிரதேசத்தின் ஒற்றுமையினை முக்கியமாக கருத்தில் கொண்டு எதிர்கால அரசியல் நடவடிக்கைகளிலும், பொது வேட்பாளராக களமிரக்கப்பட்டுள்ள ஹக்கீமின் வெற்றிக்காக சகலவிதமான ஒத்துளைப்புக்களையும் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு பிற்பாடு முதல் தடவையாக பிரதேசத்தில் உள்ள முக்கியமான இளைஞர் அமைப்பானது பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள ஹக்கீமினை சாட்டோ மன்சூருடைய வீட்டில் சந்தித்து வெற்றிக்காக சகல விதமான ஒத்துளைப்புக்களையும் தருவதாக தெரிவித்தனர்.
மேலும் குறித்த இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் இடம் பெற்ற கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் தான் எதற்காக செம்மண்ணோடை மாவடிச்சேனை வட்டாரத்திற்காக பொது களமிறக்கப்பட்டேன் என்பதனை தெளிவுபடுத்தும் சமூர்த்தி முகாமையாளர் ஹக்கீமின் கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ சமூர்த்தி முகாமையாளர் ஹக்கீமின் விளக்கம்:-
மேலும் குறித்த இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் இடம் பெற்ற கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் தான் எதற்காக செம்மண்ணோடை மாவடிச்சேனை வட்டாரத்திற்காக பொது களமிறக்கப்பட்டேன் என்பதனை தெளிவுபடுத்தும் சமூர்த்தி முகாமையாளர் ஹக்கீமின் கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ சமூர்த்தி முகாமையாளர் ஹக்கீமின் விளக்கம்:-
www.youtube.com/watch?v=mgYMi3vKOOU&feature=youtu.be