ஹனீபா மதனியினால் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு


றிசாத் ஏ காதர்-

மிக நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் காணப்பட்ட அக்கரைப்பற்று 11ம் வட்டாரத்தின் மஜீட் வீதியும், 3ம்வட்டாரத்தின் ஆலிம் வீதியும் பல லட்சம் ரூபா செலவில்புனர் நிர்மாணம் செய்யப்படுவதற்கான வேலைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குன்றுங்குளியுமாகத் தோற்றமளித்து, போக்குவரத்துக்குபொருத்தமற்றுக்கிடந்த இவ்வீதிகளின் புனர்நிர்மாணப்பணிக்குத் தேவையான நிதியினைஅரசாங்கத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள்எதிர்க்கட்சித் தலைவரும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின்அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எல்.எம் ஹனீபாமதனி மேற்கொண்டிருந்தார்.

அதன் பலனாக கிடைக்கப்பெற்ற நிதியினைக் கொண்டு இவ்வீதிகளுக்கான அடிக்கல் நடும்ஆரம்ப சம்பிரதாய நிகழவு  அண்மையில் இடம்பெற்றது.

குறித்த வீதி நிர்மாணப் பணிக்கு நிதியினை பெற்றுபுனரமைக்க உதவியதுக்கு இப்பகுதிவாழ் மக்கள்அஷ்ஷேஹ் ஹனீபா மதனிக்கு நன்றியையும்,பாராட்டினையும் தெரிவிக்கின்றனர்.

மேற்படி நிகழ்வில் அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூகஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -