திருகோணமலை: விபத்து 18 பேர் வைத்தியசாலையில்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. பாலம்பட்டாறு பகுதியில் உழவு இயந்திரத்தில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை இயந்திரத்தின் இரும்பு பாகம் டிமோ பட்டா லொறியுடன் மோதியதில் இன்று (04) மாலை 6.30மணியளவில் 18பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்தளாய். ரஜஎல பகுதியிலிருந்து உயிரிழந்த நபரொருவரின் 01 வருட பூர்த்தியை முன்னிட்டு 05ம் கட்டை பகுதியிலுள்ள அநாதை சிறுவர் இல்லத்திற்கு இரவு சாப்பாடு வழங்குவதற்காக வந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

மூன்று குடும்பங்களைச்சேர்ந்த 18 பேரில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -