சம்மாந்துறை மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் விவசாய வரம்புப் பயிர்ச்செய்கை ஆரம்பித்துவைப்பு


எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறை மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில் கொரேனாவை கட்டுப்படுத்துவம் உணவு உற்பத்தியை அதிகரிப்போம் எனும் வயல் வரம்புகளிலும், வயலைச் சூழ்ந்த பகுதிகளிலும் மரக்கறி மற்றும் உப உணவுப் பயிர் செய்கையை மேற்கொள்ளுவதற்கான பயிரிடும் வேலைத்திட்டம் இன்று மல்வத்தையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ரீ.ஏ.கரீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பங்குபற்றலுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள், மகாவலி அதிகார சபை உயர் அதிகாரிகள், உள்ளிட்டோர்களினால் வயல் வரம்புகளில் பயிர்செய்கை பயிரிடப்பட்டது.

மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு, விவசாய திணைக்களம், மகாவலி அதிகார சபை ஆகியன அம்பாரை மாவட்ட செயலகத்துடன் இணைந்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுத் தேவையை வெற்றிகொள்ளவும், மூன்றாம் போகத்திற்கு தேவையான விதைகளை நாமே உற்பத்தி செய்யவும், நெற்செய்கைக்கு மேலதிகமாக மரக்கறிச் செய்கை மூலமும் வருமானத்தை விவசாயிகள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -