எகெட் கரித்தாஸ் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெழிவூட்டும் செயலமர்வு

அப்துல்சலாம் யாசீம்-
லங்கையில் அனைத்து மதங்களுக்கிடையிலும், சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கான ஒரு பொது நோக்கை ஊக்குவிக்கும் செயற்திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெழிவுபடுத்தும் கலந்துரையாடல் திருகோணமலையில் நடைபெற்றது.
திருகோணமலை-எகெட் கரித்தாஸ் கேட்போர் கூடத்தில் இன்று (30) திட்ட இணைப்பாளர் எம். ஏ. எம். றிஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சமயத்தலைவர்கள் மத்தியில் நட்புறவை மேம்படுத்தும் திட்டம், சிறுவர் பாதுகாப்பு, கண்ணிவெடிகள் பற்றிய விழிப்புணர்வுகள், வறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம், மாணவர்களின் கல்விக்கு உதவுதல், பாதுகாப்பான வெளிநாட்டு பயணம், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த பின்னரான வாழ்வாதார உதவிகள் என பல திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் திட்ட இணைப்பாளர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், அரசாங்க திணைக்களங்களின் தரவுகளை பெற்று சேவையாற்றி வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் முகாமையாளர் ஜீ. ஏ. பிரான்சிஸ், ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -