150 சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் ஜனாதிபதி மைத்திரி!

லங்கை: சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

சுதந்திர சதுக்கத்தில் வரும் டிசெம்பர் 17ஆம் நாள் இந்த பாரிய திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று, 75 சீன திருமண இணையர்களுக்கும், திருமணச் சான்றிதழ்களை வழங்குவார்.

திருமணம் முடிந்த பின்னர், அன்றிரவு பத்தரமுல்ல -வோட்டர் எட்ஜ் விடுதியில் இராப்போசன விருந்து இடம்பெறும்.

மறுநாள், மூன்று குழுக்களாக சீன இணையர்கள், யால, சிகிரியா, கண்டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

இலங்கையின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு, பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம், சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -