காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட இவர் மர்ஹூம் அல்ஹாஜ் காசிம் முகமட் மற்றும் ஹாஜியானி சவரியதும்மாஹ் ஆகியோரின் மகனாவார்.தனது ஆரம்ப கல்வியை காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் பயின்ற இவர் தனது இடைக்கால மற்றும் உயர்தரக் கல்வியினை கல்லடி சிவானந்த தேசிய பாடசாலை, காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையிலும் பூர்த்தி செய்தார்.
உயர்தரத்தில் கணித பிரிவில் பயின்று பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கணனி விஞ்ஞான துறையில் தனது விஞ்ஞான இளமானி (BSc) பட்டத்தை பூர்த்தி செய்தார்.இதன் பின்னர்,பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது விஞ்ஞான முதுமாணி (MSc in Computer Science) பட்டத்தை கணனி விஞ்ஞான துறையில் பூர்த்தி செய்தார்.இதன் பின்னர் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கணனி விஞ்ஞான துறையில் முதுதத்துவமானி (MPhil in Computer Science) பட்டத்தை நிறைவு செய்தார். இதன் பின்னர் இந்தியாவில் டான் போஸ்கோ பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி கற்கை நெறியினை தொடர்ந்த இவர், இன்று விஞ்ஞான கணனி துறையில் தனது கலாநிதி பட்டத்தை நிறை செய்தார். இவர் தனது ஆய்வுக்காக பல ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளதோடு சர்வதேச ஆய்வு கருத்தரங்குகளிலும் பங்குபற்றி தனது ஆய்வு களை சமர்ப்பித்துள்ளார்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் கலை கலாசார பீடத்தில் தகவல் தொழில்நுட்ப துறைத் தலைவராக கடமையாற்றும் .சிறந்த சமூக சேவையாளரான இவர் பல்வேறு சமூக நிறுவனங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.இவரின் இந்த கல்வி அடைவு ஊருக்கும் சமூகத்திற்கும் சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்
0 comments :
Post a Comment