சற்றுமுன் காத்தான்குடியில் விபத்து - மூவர் வைத்தியசாலையில்

ற்றுமுன் காத்தான்குடி டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்று காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள டிப்போவுக்கு சென்று கொண்டிருக்கும் போது அதே வழியால் கடற்கரை பகுதியிலிருந்து பிரதான வீதிக்கு பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது .

குறித்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்தன. மேலும் இதன் போது ஏட்பட்ட சேதங்கள் தொடர்பில் சரியாக தெரியவில்லையெனவும் நாம் தொடர்பு கொண்டு கேட்ட நண்பர் (மிஷ்பாக் கபீர்) தெரிவித்தார். பிந்திக்கிடைத்த செய்தியில்: மேலும் ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -