கிழக்கு முதலமைச்சரின் சேவைகளுக்கு அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா பாராட்டு.!

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் துணிச்சல் மிக்க, அர்ப்பணிப்புடனான சேவைகளுக்கு அகில இலங்கை ஜமிய்யது உலமாவின் மட்டக்களப்பு மாவட்ட கிளை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது, அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் முன்னெடுக்கப்படும் வே​​லைத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்தும் ஜமிய்யதுல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்ட அங்கத்தவர்கள் முதலமைச்சர் நசீர் அஹமட்டை நேரில் சந்தித்து தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அஷ்ஷெஹ் எஸ்,எம் அலியார் (பலாஹி) உட்பட ஜம்மிய்துல் உலமாக முக்கியஸ்தர்கள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. பட்டதாரிகளின் கோரிக்கைகள் மற்றும் வேலையற்றப் பட்டதாரிகள் தொடர்பில் மட்டக்களப்பு பட்டதாரிகள் தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட ஜமிய்யதுல் உலமாவின் யோசனைகளும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.

இவற்றைப் பெற்றுக் கொண்ட கிழக்கு முதலமைச்சர் ,தாம் பட்டதாரிகளுக்கு நிரந்தரமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முழுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் இதனடிப்படையில் நாளை நடைபெறவுள்ள பிரதமரின் ஆலோசகருடனான கூட்டத்தில் சாதகமான தீர்வுகள் கிடைக்கக் கூடுமெனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -