நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கட்சி சின்னம் திருட்டு!


முஹம்மட் றிஃப்கி-
றைந்த எமது பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் தனது மரணத்திற்கு முன்பு தேசிய ஐக்கிய முன்னணி (NUA) எனும் கட்சியை ஆரம்பித்து அதனூடாக முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால அரசியலை விஸ்தரிப்பதற்கு உரிய முயற்சிகளை எடுத்திருந்தார். 

முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயரில் தேசிய அரசியலை செய்ய முடியாது என்ற காரணத்தினால் அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக கருப்பட்டது. 

ஏறத்தாள முடிவுறும் தறுவாயில் இருந்த அம் முயற்சி கைகூடுவதற்கு முன்னர் எமது பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் எம்மை விட்டும் இவ்வுலகைவிட்டும் பிரிந்து சென்றிருந்தார். 

அவ்வாறு அவர் ஆரம்பித்து வைத்த தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சிக்கு சின்னம் தெரிவு செய்யும் போது முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் பச்சை நிறத்துக்கு பொருத்தமாக மரத்தை தெரிவு செய்தது போல் தேசிய அரசியலுக்கு பொருத்தமாக எமது இலங்கை நாட்டை இரு கரங்கள் ஏந்தி நிற்பது போல் ஒரு சின்னத்தை வடிவமைத்திருந்தார். 

இதனை நீங்கள் தற்போது முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகம் தாருஸலாத்தில் காணலாம்.

தற்போது நல்லாட்சிக்காக மட்டும் தாங்கள் பிறந்தது போல் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் தேசிய ஐக்கிய முன்னணிக்காக தலைவர் அஸ்ரப் அவர்கள் வடிவமைத்த சின்னத்தில் ஒரு சிறிய மாற்றத்தை செய்து அதனை தங்களது கட்சிக்கு சின்னமாக வைத்துள்ளனர். 

இவர்களது இந்தத் திருட்டத்தனம் மிகவும் கண்டிக்கத்தக்கது. சுயமாக தங்களது கட்சிக்கு சின்னம் கூட வைக்க முடியாத இவர்கள் தங்களை படித்தவர்களாகவும் நல்லாட்சி செய்பவர்களாகவும் காட்டிக் கொள்வது யாரை ஏமாற்றுவதற்காக?

முதலில் சுயமாக சிந்தனை செய்த உங்களது கட்சியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு ஒரு சின்னத்தை வைக்கவும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -