புதிய 10ரூபா நாணயக்குற்றிகளில் முஸ்லிம்கள் புறக்­க­ணிப்பு- முஜிபுர்ரஹ்மான்

லங்­கையின் ஒவ்­வொரு நிரு­வாக மாவட்­டத்தை தனித்­துவம் வாய்ந்த பண்­பு­களை அங்­கீ­க­ரித்து இலங்கை மத்­திய வங்­கி­யினால் 25 வகை பத்து ரூபாய் நாணயக் குற்­றிகள் வெ ளியி­டப்­பட்­டன. 

இதில் இன­ரீ­தி­யான பாகு­பாடு காட்­டப்­பட்டு முஸ்­லிம்கள் முற்­றாக புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் இது முஸ்லிங்களை இழிவுபடுத்தும் செயல் எனவும் மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்­தினார்.

யாழ். மாவட்­டத்­திற்கு நல்லூர் கோயிலும் மன்­னா­ருக்கு மடு தேவா­ல­யமும் அநு­ராத புரத்­திற்கு ருவன்­வெ­லி­சா­யவும் மொன­ரா­க­லைக்கு கதிர்­காம விகா­ரையும் தனித்­துவ அடை­யா­ளப்­ப­டுத்தும் வகையில் மத ஆல­யங்­களை நிர்­வாக மாவட்­டத்தின் தனித்­து­வ­மாக சின்­ன­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அம்­பாறை மாவட்­டத்தில் பெரும்­பான்­மை­யாக முஸ்­லிம்கள் வசிக்­கின்ற அவர்­களை அடை­யா­ளப்­ப­டுத்தும் வகையில் ஒரு சின்­னத்தை தனித்­து­வப்­ப­டுத்த முடி­யாதா எனவும் அவர் கேள்வி எழுப்­பினார். 

இது­தொ­டர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், இலங்கை முஸ்­லிம்கள் 1500 வருட வர­லாற்றை கொண்­டுள்­ளனர். அத்­தோடு ஒல்­லாந்தர், போர்த்­துக்­கேசர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நிய சக்­திகள் இலங்­கையை ஆக்­கி­ரமித்­த­போது அவர்­க­ளுக்கு எதி­ராக இலங்கை மன்­னர்­க­ளோடு இணைந்து முஸ்­லிம்கள் தேசத்­துக்­காக போரா­டி­யுள்­ளனர். 

நாணயக் குற்­றியில் முஸ்­லிம்­களை அடை­யா­ளப்­ப­டுத்த விரும்­பாத இந்த அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை பெற்­றுக்­கொ­டுக்கும் என்ற நம்­பிக்கை இல்லை.

நிதி அமைச்சின் ஊடா­கவே இந்த நாணயக் குற்­றிகள் வெளி­யி­டப்­பட்­டது. நாட்டின் நிதி அமைச்­ச­ராக ஜனா­தி­ப­தியே இருக்­கின்றார். இவரே சகல விடயத்தையும் இன ரீதியில் வேறுபடுத்தி பார்க்கிறார். 

நாணயக் குற்றியில் முஸ்லிம்களின் அடையாள சின்னமொன்றையாவது பதிவு செய்வதற்கு அவர் விரும்புவதாக இல்லை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :