ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) ஏறாவூரில் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் பி.ப.4.30மணிக்கு இப்பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பின் தலைவர் பசீர் சேகுதாவுத் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி ஆகியோர் இத்தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்