ஹாஷிம் உமர் பவுண்டேசனின் அனுசரணையுடன் ஊடகவியலாளர்களுக்கு அங்கி வழங்கும் நிகழ்வு!



அபு அலா-
ஜ்ஜூப் பெருநாள் தினத்தையொட்டி புரவலர் ஹாஷிம் உமர் பவுண்டேசன் அமைப்பினால், நாடளாவிய ரீதியிலுள்ள ஊடக அமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டதற்கமைவாக, இப்போட் மிரர் ஊடக அமைப்புக்கு கிடைக்கப்பெற்ற நிதி உதவியில் இப்போட் மிரர் ஊடக அமைப்பின் அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இப்போட் மிரர் ஊடக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸின் வழிகாட்டலின் கீழ், அதன் முகாமையாளர் எம்.வை.அமீர் தலைமையில் (06) சாய்ந்தமருதில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி போராசிரியர் எம்.எம்.பாஸில் பிரதம அதிதியாகவும், உலமாக் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.ஏ.சத்தார் ஆகியோர் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கான அங்கிகளை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில், இப்போட் மிரர் ஊடக அமைப்பின் ஸ்பாகர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர் பலர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :