சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை. ஆதம்பாவா எம்.பியும் பங்கேற்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் வழமைபோன்று இம்முறையும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இடம்பெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒரே தடவையில், குறிக்கப்பட்ட உரிய நேரத்தில் மாவடிப்பள்ளி ஸஃது அரபுக் கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம். முபாறக் (ஹாசிமி)யினால் தொழுகையும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இதன்போது அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா உட்பட சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், பெண்கள் உட்பட சிறுவர்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :