மல்வானை ஆரம்ப பிரிவு மாணவி மரியம் தேசிய மட்டத்தில் சாதனை.


2013 ம் ஆண்டு பாடசாலை தனியாக மாகாண பாடசாலையாக பிரிக்கப்பட்டு 7 ஆண்டுகளில் ஒன்றன் பின் ஒன்றாக தொடராக வெற்றி நடைபோடும் மே /மா /கள அல்முபாரக் கனிஷ்ட வித்தியாலயம் - மல்வானை இவ்வருடமும் அதனது சிறந்த நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழாத்தின் அயராத அர்ப்பணம் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஒத்துழைப்பு காரணமாக இன்னொரு காத்திரமான மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
2019 ம் கல்வியாண்டில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட மீலாத் போட்டியில் ஆரம்ப பிரிவு பேச்சு போட்டி தமிழ் மொழிப்பிரிவில் பிரபல எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீன் - பாத்திமா நஸ்மியா தம்பதியின் செல்வப் புதல்வி செல்வி பாத்திமா மர்யம்
தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றுக்கொடுத்து பாடசாலைக்கும் ஊருக்கும் நிலையான பெருமையை புகழை தேடித்தந்தந்துள்ளார். இவர் கடந்த வாரம் வெளியாகிய ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதோடு அல் முபாரக் ஆரம்ப பிரிவில் முதல் தடவையாக மேல்மகாணத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 2ஆம் இடத்தையும் பெற்றுக்கொடுத்த சாதனை மாணவர் இவராவர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -