கல்முனைப் பிரதேசம் என்றுமில்லாத அபிவிருத்தியை காண்பதுடன் ஒற்றுமையாகும் என்கிறார் சட்டத்தரணி .அப்துல் றஸாக்

எம்.ஏ.ஏ.அக்தார்-

ல்முனைப் பிரதேசம் என்றுமில்லாத அபிவிருத்தியை காண்பதுடன் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கரங்களை பலப்படுத்துவோம்.

இவ்வாறு கல்முனைப் பிரதேசத்தில் கடந்த புதன் கிழமை கல்முனை ஐக்கிய தேசியக்கட்சி தலைமைக்காரியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இளைஞர்களுக்கான கலந்துரையாடலின் போது உரையாற்றிய கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்த நாட்டில் மிகக்குறைந்த காலப்பகுதியில் கூடுதலான அபிவிருத்தியை ஏற்படுத்தி வரும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் கீழ் ஏழை மக்களின் தேவையையையும் உணர்வுகளையும் அறிந்து செயற்பட்டுவரும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை அதிக கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் இந்த நாடே வெற்றியடையச் செய்து அழகு பார்க்க இருக்கும் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் கல்முனைப் பிரதேச இளைஞர்களும் இதில் இணைந்து கொள்ள வேண்டும்.

பொய் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் விதைத்து அவர்களது மதிப்புமிக்க வாக்குகளை சூறையாட களம் இறங்கியுள்ள குடும்ப ஆட்சிக்கு ஏற்கனவே ஆப்பு வைத்ததது போன்று இம்முறையும் அதேபோன்ற செயற்பாட்டில் இறங்க மக்கள் அணி அணியாக திரண்டு விட்டனர்.

சிங்கள , தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குடன் வெற்றிபெற்று தந்தை வழியில் மக்களின் காலடிக்கு சென்று சேவையாற்றக்கூடிய ஒரு பெரும் தலைவரை இந்த நாடு பெற இருக்கின்றது. பல ஆண்டுகாலமாக அபிவிருத்தி எதனையும் காணாமல் பாலைவனமாக மாறியுள்ள கல்முனை பிரதேசத்தில் காணப்படும் அதிகளவிலான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதோடு இன்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்ற தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் வகையில் பல திட்டங்களை வகுத்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வெற்றியில் கல்முனைப் பிரதேச இளைஞர்கள் அனைவரும் பங்காளிகளாக மாற வேண்டும்.
என்று தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -