மகனே சுஜித் நீ நலமாக இருக்கிறாயா ?.. | ஒரு தாயின் குரல் அனைவரையும் அழவைக்கிறது..!

திருச்சி மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டி எனும் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறொன்றில் நேற்று மாலை சுர்ஜித் எனும் இரண்டு வயதுக்குழந்தையொன்று தவறி வீழ்ந்திருந்துள்ளது.

ஆழ்துளை கிணறுகுக்குள் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆள்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த 18 மணி நேரமாக குழந்தையை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் 26 அடி ஆழத்தில் வீழ்ந்த குழந்தை 80 அடி ஆழத்துக்கு சென்றுள்ளமையினால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் மண் சரிந்து வீழ்ந்துள்ளாதாாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் குழந்தையை மீட்கும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறு இருந்தாலும் அப்பாவிக் குழந்தை உயிருடன் மீட்கப்படவேண்டும் பிரார்த்திப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -