உயர்தரப் பரீட்சையில் கையடக்க தொலைபேசியை வைத்திருந்த மாணவனிடம் விசாரணை ; கம்பஹாவில் சம்பவம்


ஐ. ஏ. காதிர் கான்-
ம்பஹாவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் நிலையம் ஒன்றில், உயர்த்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த பரீட்சார்த்தி ஒருவர், தனது கையடக்கத் தொலைபேசியை தன்வசம் வைத்துக் கொண்டு பரீட்சை எழுதிய சம்பவம் தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது நடைபெறும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் வினாவுக்கு பதிலளிக்கும் போது, கம்பஹா பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே, இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விசாரணைகள், பரீட்சை நிறைவடைந்த பின்னர் உடனடியாக ஆரம்பமாகும் என்று, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
அதுவரையில் பரீட்சை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எந்தவிதத் தடைகளும் ஏற்படாதவாறு, குறித்த மாணவனுக்கு இப் பரீட்சையை எழுதுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இது தொடர்பிலான விசாரணையின்போது, கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால், இம்மாணவனுக்கு எதிராக அதி உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இச்சம்பவம், கடந்த (13) திங்கட்கிழமை கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -