அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் மலீக் கெளரவிப்பு



அஸ்லம் எஸ்.மெளலானா-
35 வருட கால பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ். அப்துல் மலீக், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) கோமாரி வெளிச்ச வீடு கடற்கரை விடுதியில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவரான கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இதன்போது எம்.எஸ். அப்துல் மலீக்கின் உன்னத சேவைகள் மற்றும் அவரது ஆற்றல், ஆளுமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன் நினைவு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் பொருளாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :