1.5 கோடியில் கிழக்கில் இரு வைத்திய சாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

அப்துல்சலாம் யாசீம்-

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் 1.5 கோடி ரூபாவுக்கு மேலான தொகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள இரு வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது,

இதன் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் வைத்தியசாலை 7.7 மில்லியன் ரூபா செலவிலும் மருத்துவ வாட் தொகுதி புனரமைக்கப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஆய்வு கூடம், வெளி நோயாளர் பிரிவு என்பன புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன், வாகன தரிப்பிடமும் இங்கு அமைக்கப்படவுள்ளதாக கட்டிடங்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி W.A.W.அபேவர்தன தெரிவித்தார்.

இதனை நான்கு மாதகாலத்தில் நிர்மாணித்து முடித்து மக்கள் பாவனைக்கு ஒப்படைக்க படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -