உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தம் குறித்த உத்தேச சட்ட மூலம் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.உத்தேச திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களுக்கு நாடாளுமன்றின் பெரும்பான்மை அனுமதி அவசியம் என சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உள்ளூராட்சிமன்ற அமைச்சு அதிகாரிகள் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சட்ட உருவாக்க திணைக்கள அதிகாரிகள் இணைந்து உத்தேச திருத்தச் சட்டத்தை உருவாக்கியுள்ளனர். மேலும், உத்தேச திருத்தச் சட்டத்தை வர்த்தமானியில் அறிவித்து அதன் பின்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.