ரணசிங்க பிரேமதாசவின் 23வது நினைவு தின நிகழ்வில் அரசின் தவறை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி..!

ரசாங்கம் செய்யும் சிறந்த பணிகளை, மக்கள் மத்தில் கொண்டு செல்லும் பொறுப்பை அரச தரப்பினர் சரியான முறையில் செய்யாமையே, எதிர்த் தரப்பினருக்கு அரசாங்கம் செய்யாத விடயங்களை பற்றி பேச இடம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 23வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி;

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச எளிய மக்களை நேசித்தார். ஜனசவிய, கம்உதாவ போன்ற வேலைத்திட்டங்கள் மூலம் சாதாரண மக்களுக்கு உதவினார்.

அதேவேளை அரசாங்கம் செய்யும் வேலைத்திட்டங்களை மக்கள் மத்திக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்தார் எனவும் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -