வாழைச்சேனை ஆற்றில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி மரணம்!

ந.குகதர்சன்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை 04ம் வட்டாரத்தில் ஆற்றில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் முஹம்மதியா வீதியைச் சேர்ந்த பின்ஹூஸைன் முஹம்மது முஹ்ஷின் (வயது – 18) என்பவரே இவ்வாறு உயிர் இழந்தவர் என்று அடையாளங் காணப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியாகிய குறித்த இளைஞர் வாழைச்சேனை ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கியதாகவும், இவரது கூக்குரல் சத்தம் கேட்டு கரையில் இருந்தவர்கள் காப்பாற்றுவதற்கு சென்றபோதும் அவரது சடலத்தையே மீட்டுள்ளனர்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணை முடிவுற்றதும் உறவினர்கள் ஒப்படைக்கப்படவுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -