ஜே.எப்.காமிலா பேகம்-
ஓட்டமாவடி பிரதேச சபைக்குற்பட்ட நாவலடி,ஹிஜ்ரா நகர் பகுதியில் மிகவும் வரட்சியானநிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டமாவடிபிரதேச சபையினால் இடையிடையே அப்பிரதேசத்தின் பல இடங்களுக்கு தண்ணீர் வினியோகம் இடம்பெற்றாலும் பாரபட்சமாகவே மக்களுக்கு இந்த விநியோகம் இடம் பெறுகிறது.
தண்ணீர் விநியோகிப்பவர்கள் லஞ்சம் வழங்கினால் மட்டுமே, தண்ணீர் வழங்க முன் வருவதாக பலர் விசனம் தெரிவிக்கின்றனர்.பணம் படைத்த வர்த்தகர்களின் தனிப்பட்ட "கவனிப்பு"காரணமாக தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும் கட்டுமானப்பணிகளுக்கும், ஹோட்டல் போன்ற வியாபாரம் செய்பவர்களுக்கும் தாராளமாக வினியோகம் செய்ய முன் வருவதாகவும், மக்களின் வீட்டுப்பாவனைக்கு தண்ணீர் விநியோகம் செய்ய மிகவும் தயக்கம் காட்டுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.வறியமக்கள் வாழும் இப்பிரதேசத்தில் தண்ணீர் வினியோகம் சரியாக இடம்பெறாததால் மக்கள் பெறும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
ReplyReply allForward