த.தே.கூ.வேட்பாளர் டாக்டர் சயனின் தேர்தல் பிரச்சாரம் ஆலயத்தில் ஆரம்பம்


காரைதீவு நிருபர் சகா-
திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் சமுகசெயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான டாக்டர்.இரா. சயனொளிபவனுடைய தேர்தல் பிரச்சாரம் நேற்றுக்காலை தம்பிலுவில் களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் சமய அனுட்டாடங்களோடு ஆரம்பமானது.

இறைவனின் ஆசி வேண்டி நடைபெற்ற இவ் சமய நிகழ்விலே பெரியோர்கள் தாய்மார்கள் இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமோக ஆதரவுடன் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் வாக்காள பெருமக்களால் அமோக ஆதரவு வழங்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த மக்கள் சயளொளிபவனுடைய வெற்றிக்கு பூரண ஆதரவு வழங்குவதாக உறுதி அளித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -