சிறைச்சாலை திணைக்களத்துக்குரிய பஸ் விபத்து - அறுவர் காயம்


க.கிஷாந்தன்-

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் ஹக்கல பூங்கா பகுதியில் வைத்து, சிறைச்சாலை திணைக்களத்துக்குரிய பஸ் விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அறுவர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி சென்ற சிறைச்சாலை பஸ்ஸே இன்று (31) மாலை 05.30 மணியளவில் நுவரெலியா ஹக்கல பூங்கா பகுதியில் வைத்து, பாரிய வளைவொன்றில் தம்புரண்டு குடியிருப்யொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது கைதிகள் எவரும் பஸ்ஸில் இருக்கவில்லை எனவும், சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே பயணித்துள்ளனர் எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் அறுவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பெண் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -