இன்று இகிமிஷனில் சிறப்பாக நடைபெற்ற குருபூர்ணிமா தினம்



வி.ரி.சகாதேவராஜா-

ராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கல்லடி இ.கி.மிஷன் குருகுலம் ஏற்பாடு செய்த குரு பூர்ணிமா தின நிகழ்வுகள் இராமகிருஷ்ண திருக்கோவிலில் இன்று (10) வியாழக்கிழமை காலை முதல் சிறப்பாக நடைபெற்றது. .

இந் நிகழ்வு இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்சராத்மானந்தா ஜீ மகராஜ் வழிகாட்டலில்
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சுவாமி உமாதீசானந்தா ஜீ ஆகியோருடன் மிஷன் பழைய மாணவர்கள் அபிமானிகள் கலந்து சிறப்பித்தார்கள்.

பல்கலைக்கழக கல்வியை பூர்த்தி செய்த மிஷன் மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :