ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். முன்னாள் இராஜாங் அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்..



டகவியலாளரும், சமூக செயற்பாடாளருமான நூருல் ஹுதா உமர் நேற்றிரவு (2025.07.11) தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த தாக்குதல், ஊடகவியலாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை குறைக்கும் ஒரு முயற்சியாகும்.

ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திற்கும் உரிமைக்குமான மீறலை தடுக்க, தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்கள், சமூகத்தின் கண்காணிப்பாளர்களாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், சமூகத்தின் சுதந்திரமான தகவல் பரிமாற்றத்தை பாதிக்கக்கூடும். எனவே, இந்த சம்பவம் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலைமையில், சமூகத்தின் ஒற்றுமையும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் முக்கியமாகும்.

எனவே இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிசார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் ஜனநாயக விரோதிகளின் வன்முறை போக்குகளுக்கு வெகுஜன தொடர்பு சுதந்திரம் இலக்காகுவதிலிருந்தும் விடுபட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :