கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புள்ள மாணவர் சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் தேசிய ரீதியாக ஒரே நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் (09) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியிலும் முன்னெடுக்கப்பட்டது
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிளீன் ஸ்ரீ லங்கா டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஜெ.எம்.நிஜாமுத்தீன் அவர்களால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு பாடசாலையின் சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்து டெங்கு இல்லாத பிரதேசமாக மாற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதனை அடுத்து பாடசாலையின் பிரதான நுழைவாயில் இருந்து பிரதான வீதி ஊடாக கிளீன் ஸ்ரீலங்கா தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு வீதி ஊர்வலம் இடம்பெற்றது.
பாடசாலையில் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட உதவி அதிபர் எம். எஸ். முஹிஸா சர்மூன் உட்பட பாடசாலையின் பிரதி அதிபர் எம்.பி. அஹமட் ராஜி, பிரதி அதிபர் ஏ.ஆர்.என்.மன்பூசா, உதவி அதிபர்களான எம்.ஐ.சர்மலா, எஸ்.நஹீதா, ஏ.சி.எம்.றக்ஸான் உட்பட பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment