இதில் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது பொதுமக்களிடம் உரையாற்றிய அனுஷா சந்திரசேகரன்,
உங்கள் ஊருக்கு சேவை செய்ய, உங்கள் ஊருக்கான அபிவிருத்திகளை செய்ய, உங்கள் ஊரை முன்னேற்றமடைய செய்ய காலாகாலமாக அந்த கட்சி இந்த கட்சி என வாக்களித்தது போதும், உங்கள் ஊரிலிருந்து ஒருவரை தெரிவு செய்யுங்கள்,
ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாத, மக்களோடு மக்களாக இருப்பவர்களையே நாம் இம்முறை தபால் பெட்டி சின்னத்தில் அகரபத்தனை பிரதேச சபைக்கு களமிறக்கியிருக்கிறோம்.
ஆகவே இவர்களை ஆதரித்து பிரதேச சபைக்கு தெரிவு செய்வதன் மூலம் பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகளை எமது மக்களுக்கு இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் , ஆகவே இம்முறை தனித்துவம் காத்த தலைவரின் வழியில் பயணிக்கும் எம்மவர்களுக்கு தபால் பெட்டி சின்னத்துக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment