இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகம் (AAT நிறுவனம்) கல்வி அமைச்சுடன் இணைந்து க.பொ.த.உயர்தர வகுப்புக்களைக் கொண்ட தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கிடையே நடாத்திய சிறந்த ஆண்டறிக்கை போட்டி – 2019 ல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை முதலாமிடத்தை பெற்றுள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 28 ம் திகதி இலங்கை AAT நிறுவனத் தலைவர் ஜெஸ்ரி மெக்டொம் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கல் மற்றும் கெளரவிப்பு நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ஜெயசிங்கவினால் பாடசாலைக்கான சான்றிதழும் விருதும் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி தேசிய பாடசாலை 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் மாவட்டத்தில் மூன்றாமிடமும் 2018 ல் இரண்டாமிடமும் பெற்றுக்கொண்டது. அத்தோடு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து இப்போட்டியில் பங்குபற்றி தொடர்ச்சியாக விருதினை பெற்று வருகின்றது.
குறித்த பாடசாலை விருதினைப் பெறுவதற்கு பங்காற்றிய அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர்களுக்கு மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலானா மற்றும் கல்வி அதிகாரிகள், பாடசாலை நிறைவேற்று அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் அமைப்பு உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.