கண்ணில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை இனங்கண்டு இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ள கண்களை பரிசோதிக்கும் முகாம் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரணையில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்துள்ள இப் பரிசோதனை முகாமனது அன்றைய தினம் காலை 8 மணியலவில் இடம்பெறவுள்ளது.
இதில் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயன் பெற முடியும்.
குறித்த பரிசோதனை முகாமில் கண்ணில் வெள்ளை படர்தல் நோய் உள்ளவர்களை இனங்கண்டு முற்றிலும் இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.